*தமிழ் அறிவோம்..!*
-------------------
*ண ன ந*
எங்கெல்லாம் வரும் ?
-------------------
*ண ன ந*
எங்கெல்லாம் வரும் ?
மூனுசுழி *“ண”*,
ரெண்டுசுழி *“ன” "ந"*
என்ன வித்தியாசம்?
ரெண்டுசுழி *“ன” "ந"*
என்ன வித்தியாசம்?
படிக்காதவர்க்கும் நல்ல தமிழைக் கற்றுத்தந்தவர் நடிகர்திலகம் சிவாஜி கணேசன்..
_கண்ணப்பன்_ னு எழுதச்சொன்னா, ஒருத்தன் 4சுழி 5சுழி போட்டானாம்!
என்னப்பா-னு கேட்டதுக்கு அவன் கேட்டானாம்:
“தமிழ் வளரவே கூடாதாய்யா?
ரெண்டு சுழி மூனு சுழி இருக்கலாம்...
4சுழி 5சுழி இருக்கக் கூடாதா?" ன்னு...
என்னப்பா-னு கேட்டதுக்கு அவன் கேட்டானாம்:
“தமிழ் வளரவே கூடாதாய்யா?
ரெண்டு சுழி மூனு சுழி இருக்கலாம்...
4சுழி 5சுழி இருக்கக் கூடாதா?" ன்னு...
தமிழ் எழுத்துகளில் -
*ரெண்டுசுழி *ன*
என்பதும் தவறு!
*மூனுசுழி ண*
என்பதும் தவறு!
*ரெண்டுசுழி *ன*
என்பதும் தவறு!
*மூனுசுழி ண*
என்பதும் தவறு!
*ண* -
இதன் பெயர் _*டண்ணகரம்;*_
இதன் பெயர் _*டண்ணகரம்;*_
*ன* -
இதன் பெயர் _*றன்னகரம்;*_
இதன் பெயர் _*றன்னகரம்;*_
*ந* -
இதன் பெயர் _*தந்நகரம்*_
என்பதே சரி.
இதன் பெயர் _*தந்நகரம்*_
என்பதே சரி.
_*மண்டபம், கொண்டாட்டம்*_
– என எங்கெல்லாம் இந்த மூனு சுழி *ண*கர ஒற்றெழுத்து வருதோ, அதையடுத்து வர்ர உயிர்மெய் எழுத்து *'ட'* வர்க்க எழுத்தாகத்தான் இருக்கும். இதனால இதுக்கு _*"டண்ணகரம்"*_ னு பேரு.
(சொல்லிப் பாருங்களேன்?)
– என எங்கெல்லாம் இந்த மூனு சுழி *ண*கர ஒற்றெழுத்து வருதோ, அதையடுத்து வர்ர உயிர்மெய் எழுத்து *'ட'* வர்க்க எழுத்தாகத்தான் இருக்கும். இதனால இதுக்கு _*"டண்ணகரம்"*_ னு பேரு.
(சொல்லிப் பாருங்களேன்?)
_*தென்றல், சென்றான்*_
– என எங்கெல்லாம் இந்த ரெண்டு சுழி *ன*கர ஒற்றெழுத்து வருதோ, அதையடுத்து வர்ர உயிர்மெய் எழுத்து *'ற'* வர்க்க எழுத்தாகத்தான் இருக்கும். இதனால இதுக்கு _*"றன்னகரம்"*_ னு பேரு.
(சும்மா சொல்லிப்பாருங்க?)
– என எங்கெல்லாம் இந்த ரெண்டு சுழி *ன*கர ஒற்றெழுத்து வருதோ, அதையடுத்து வர்ர உயிர்மெய் எழுத்து *'ற'* வர்க்க எழுத்தாகத்தான் இருக்கும். இதனால இதுக்கு _*"றன்னகரம்"*_ னு பேரு.
(சும்மா சொல்லிப்பாருங்க?)
_*இது ரெண்டும் என்றுமே மாறி வராது..*_
(இதுல கூட பாருங்களேன்? பிரியாத காதலர்கள் மாதிரிச் சேந்து சேந்தே வர்ரதப் பாருங்களேன்! இது புரியாம, இதுகள நாம பிரிச்சுடக் கூடாதுல்ல?)
வேற மாதிரி சொன்னா
இதுவும் வர்க்க ஒற்றுமைதான்!
இதுவும் வர்க்க ஒற்றுமைதான்!
('வர்க்க எழுத்து'-ன்னா,
சேந்து வர்ர எழுத்து! அவ்ளோதான்)
சேந்து வர்ர எழுத்து! அவ்ளோதான்)
இந்தப் பெயரோடு
(டண்ணகரம்,
றன்னகரம்,
தந்நகரம்)
இந்த *ண, ன, ந* எழுத்துகளைப் பற்றி அறிந்து கொண்டால்
எழுத்துப் பிழையும் குறையும்.
(டண்ணகரம்,
றன்னகரம்,
தந்நகரம்)
இந்த *ண, ன, ந* எழுத்துகளைப் பற்றி அறிந்து கொண்டால்
எழுத்துப் பிழையும் குறையும்.
எப்புடீ?
_*மண்டபமா? மன்டபமா?*_
சந்தேகம் வந்தா...
பக்கத்துல *'ட'* இருக்கா,
அப்ப இங்க மூனு சுழி *'ண்'*
தான் வரும்.
ஏன்னா அது _*"டண்ணகரம்".*_
சந்தேகம் வந்தா...
பக்கத்துல *'ட'* இருக்கா,
அப்ப இங்க மூனு சுழி *'ண்'*
தான் வரும்.
ஏன்னா அது _*"டண்ணகரம்".*_
*_கொன்றானா? கொண்றானா?_*
சந்தேகம் வந்தா...
பக்கத்துல *'ற'* இருக்கா
அப்ப இங்க ரெண்டு சுழி *'ன்'*
தான் வரும்.
ஏன்னா அது _*"றன்னகரம்"*_
என்று புரிந்து கொள்ளலாம்.
சந்தேகம் வந்தா...
பக்கத்துல *'ற'* இருக்கா
அப்ப இங்க ரெண்டு சுழி *'ன்'*
தான் வரும்.
ஏன்னா அது _*"றன்னகரம்"*_
என்று புரிந்து கொள்ளலாம்.
இதே மாதிரித்தான்
*'ந'* கரம் என்பதை,
*"தந்நகரம்"* னு
சொல்லணும்..
ஏன்னா இந்த *'ந்'* எழுத்தை அடுத்து
வரக்கூடிய உயிர்மெய் *'த'* மட்டுமே.
_*(பந்து, வெந்தயம், மந்தை)*_
*'ந'* கரம் என்பதை,
*"தந்நகரம்"* னு
சொல்லணும்..
ஏன்னா இந்த *'ந்'* எழுத்தை அடுத்து
வரக்கூடிய உயிர்மெய் *'த'* மட்டுமே.
_*(பந்து, வெந்தயம், மந்தை)*_
இன்று முழுமையாக தெரிந்து தெளிந்து நீங்களும் தெரிந்து கொள்ளவே இப்பதிவு.
எமக்கு புரிந்தது பகிர்ந்தோம் .!
உங்களுக்கும் புரிந்தால் பகிரலாமே .!
மற்றவர்களும் புரிந்து கொள்ளட்டுமே..!!!
உங்களுக்கும் புரிந்தால் பகிரலாமே .!
மற்றவர்களும் புரிந்து கொள்ளட்டுமே..!!!
நன்றி
courtesy
http://valarumkavithai.blogspot.com
No comments:
Post a Comment